April 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் 124-வது மாசி மகத் தீர்த்தவாரி விழா: கருவடிக்குப்பம் வாகை அறக்கட்டளை சார்பில் உற்சாகமாக நடைபெற்ற அன்னதானம்!

புதுச்சேரி:

புதுச்சேரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 124-ஆம் ஆண்டு மாசி மக தீர்த்தவாரி விழா இன்று பக்தி பரவசத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. அதில் ஒரு பகுதியாக புதுச்சேரி கருவடிக்குப்பம் வாகை அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சிக்கு, அதன் நிறுவனத் தலைவர் ஜெகன் தலைமை தாங்கி உணவுகளை வழங்கினார். உடன் துணைத்தலைவர் ஜெயேந்திரன், செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக், துணைச் செயலாளர் ஹரி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp