_கிருஷ்ணகிரி: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி, கிருஷ்ணகிரி பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு, இந்திய பல் மருத்துவர்கள் சங்க, கிருஷ்ணகிரி கிளை தலைவர் பிரபு தலைமை வகித்து, புகை பிடிப்பது, புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படும் நோய், உடல்நிலை பாதிப்பு குறித்து பேசினார். கிருஷ்ணகிரி பல் மருத்துவர் சங்க செயலாளர் நிவாஸ், டாக்டர்கள் ஆயிஷா பிரதோஷ், சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு பேரணியில், தனியார் நர்சிங் கல்லுாரி மாணவியர், 100க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகை ஏந்தி, புகையினால் உண்டாகும் நோய்கள் குறித்து, கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர். கிருஷ்ணகிரி – பெங்களூரு சாலை வழியாக பழைய வீட்டு வசதி வாரிய பகுதி, லண்டன் பேட்டை, வழியாக சென்று பேரணி, புனித பாத்திமா மேல்நிலைப்பள்ளி இணைப்பு சாலை பகுதியில் நிறைவடைந்தது.
பல் மருத்துவர்கள் சங்கத்தினர் புகையிலை எதிர்ப்பு பேரணி

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!