டிச.12
குன்னத்தூர் காவல் நிலையத்தில் குட்கா வழக்குகளில்2025
வருடம் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 254 கிலோகிராம் குட்கா பொருட்களை நீதிமன்ற உத்தரவு படி தீயிலிட்டு அழிக்கப்பட்டது.
போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் பொருட்டு இன்று 09.12.2025 ஆம் தேதி இந்த வருடம் (2025) குன்னத்தூர் காவல் நிலையத்தில் குட்கா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட
சுமார் 254 கிலோ கிராம் குட்காவை
உத்துக்குளி நீதிமன்றம். காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ்
உத்தரவு படி
குன்னத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.சுசீலா, குன்னத்தூர் டவுன் பஞ்சாயத்து செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன், ஊத்துக்குளி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி இளங்கோவன், குன்னத்தூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர்கள் முன்னிலையில் 8 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா முழுவதும் குன்னத்தூர் அருகில் உள்ள காட்டு பகுதியில் வைத்து தீயிலிட்டு முறைப்படி அழிக்கப்பட்டது.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.