சேலத்தில் உடலில் சாயம் பூசிக்கொண்டு மனு.
சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு.
சேலம் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் உடலில் சாயம் பூசிக்கொண்டு நூதன முறையில் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.
சேலம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியைச் சோ்ந்தோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில், சேலம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் 50-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்க திட்டமிடப்படுகிறது. சாயப்பட்டறைகள் அமைய உள்ள பகுதிகளில் நிலம், நீா், காற்று மாசுபாடு ஏற்பட்டு புற்றுநோய், தோல் சம்பந்தமான நோய்கள் அதிக அளவில் வரவாய்ப்புள்ளன.
மேலும், சாயப்பட்டறை அமைந்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா் மாசுபடும். அன்றாட பயன்பாட்டுக்கும், குடிநீருக்கும் நீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும். எனவே, சாயப்பட்டறை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை அமைக்க நடவடிக்கை எடுத்தால், ஊா்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனா்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்