ஜி-பேயில் ரூ.27,000,3 சவரன் செயின் கொள்ளை.சேலம் எஸ்.ஐ-க்கு நேர்ந்த கதி.போலீஸையே அலறவிட்ட விசிக பிரமுகர் மற்றும் போலி பெண் வழக்கறிஞர்.
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில்,காவல் உதவி ஆய்வாளர் பூபதி என்பவரைத் திட்டமிட்டு ஏமாற்றிப் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலமேலு என்ற பெண் தன்னை வழக்கறிஞர் என்று கூறி பூபதியுடன் பழகியுள்ளார்.
இதனை நம்பி இரவு நேரத்தில் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களைப் படம் பிடித்து மிரட்டியுள்ளது. பூபதியிடம் இருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ஜி-பே (G-Pay) வழியாக 27,000 ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது.
பாதிக்கப்பட்ட பூபதி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அலமேலு 12-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு வழக்கறிஞர் போல நடித்து வந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இந்த மோசடியில் அவருக்குத் துணையாக இருந்த விசிக ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு போலீஸ் அதிகாரியே மிரட்டிப் பணம் பறிக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!