திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கண்ணுடையான் பட்டி ஊராட்சில் உள்ள சிப்காட் தொழில் பூங்கா வளாகத்திள் வரும் 14 ம் தேதி சமத்துவப் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி சிப்காட் வளாகத்தில் மாபெரும் தூய்மைப்பணியானது இன்று துவங்கியது. 14 ம்தேதி வரை இப்பணி நடைபெற இருப்பதைத் தொடர்ந்து சிப்காட் போகி 2026 நிகழ்வின் மாபெரும் தூய்மைப் பணியினை இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஶ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சீனிவாசன்,மணப்பாறை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன்,சிப்காட் தலைமை அலுவலக கண்காணிப்பு அலுவலர் அனிதா அசோகன் மற்றும் மணப்பாறை சிப்காட் திட்ட அலுவலர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சிப்காட் வளாகத்தில் தூய்மை பணியினை கொடி அசைத்து துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சரவணன்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்