பள்ளி
துணை முதல்வர் உமா வாழ்த்துரை வழங்கினார்.
விழாவிற்கு ஐந்தாம் வட்ட பள்ளித்துணை ஆய்வாளர் புவியரசன் முன்னிலை வகித்தார். மாநில திட்ட இயக்குநர் எழில் கல்பனா விழாவினை துவக்கி வைத்தார்.

மாணவர்களின் வாசித்தல் மற்றும் எண்ணறிவு செயல் பாடுகளையும், கற்றல் கற்பித்தல் கண்காட்சியையும், முன்மழலையர்களின் கற்றல் பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட்டார். சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு புத்தகங்களையும் கேடயங்களையும் வழங்கினர். மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி மேன்மேலும் வளரத் தங்களின் வாழ்த்துகளைக் கூறினர்.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆசிரியை கௌசல்யா விழாவை தொகுத்து வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் ஊழியர்களும் செய்திருந்தனர். இறுதியாக ஆசிரியை சரிதா நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்