திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திப்பு ஆதரவு திரட்டினார்.
நாமக்கல். மார்ச் 31
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளின் தீவிரம் காட்டி வருகின்றனர்.
2026 சட்டமன்ற பொது தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியின் தீவிரமாக தேர்தல் களத்தில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம், சுயேச்சைகள் என தங்கள் தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக எஸ். பாலுவை திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் எஸ். பாலு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
தொடர்ந்து அவர் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதனை அடுத்து அதற்கான பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக திமுக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..