கள்ளக்குறிச்சி ஜன 04
கள்ளக்குறிச்சி மாவட்ட கராத்தே சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சடையம்பட்டு மற்றும் செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த சாம்பியன்ஸ் மேக்கர் அகாடமி மாணவ மாணவியர்கள் 13 தங்கப் பதக்கத்தையும் 9 பேர் வெள்ளி பதக்கத்தையும் 2 பேர் வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
இதில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவ மாணவிகள் ஜனவரி மாதம் 4 தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களை பாராட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கராத்தே சங்கத்தின் தலைவர் செங்குட்டுவன், செயலாளர் கோபு, சேர்மன் ஏழுமலை மற்றும் சாம்பியன்ஸ் மேக்கர் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை கொடுத்து பாராட்டினர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்