முன்னதாக சேதுசெல்வத்தின் இல்லத்திற்கு வருகை தந்த லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு, பட்டாசுகள் வெடித்து, மலர் தூவி உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சேதுசெல்வத்தின் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர், ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் நிர்வாகிகளுக்கு அவரது இல்லத்தில் அறுசுவை அசைவ விருந்து அளித்தார் சேது செல்வம்.
விரைவில் சேதுசெல்வம் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைய உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியை தொடர்ந்து பொங்கல் பண்டிகை ஒட்டி சேது செல்வம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரும்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அப்பகுதி மக்களுக்கு கரும்புகள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்