February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அத்வைதா இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ரத்ன திவ்யா செய்தியாளர்கள் சந்திப்பு!!

திருப்பூர், பிப்.7-

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அத்வைதா இன்டர்நேஷனல் பள்ளியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அத்வைதா இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ரத்ன திவ்யா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது TA திருப்பூரில் 2016ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அத்வைதா இண்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அத்வைதா சர்வதேச பள்ளி, கல்வி என்பது மதிப்பெண்களைத் தாண்டி ஆளுமை வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது. 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, மாண்டிசோரி கல்வி முறையை பின்பற்றி, குழந்தைகள் தங்கள் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்கியுள்ளது. 2020ல் பிரதான வளாகம் திறக்கப்பட்டு, பல சவால்களையும் கடந்து தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.திருப்பூரிலேயே முதல் முறையாக, பள்ளி வளாகத்தின் மேற்கூரையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

BASKETBALL TOURNAMENT
CBSE மற்றும் Cambridge பாடத்திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அத்வைதா சர்வதேச பள்ளி, கல்வி மற்றும் ஒழுக்கத்தை இணைத்த ஒரு சிறந்த கல்வி மையமாக திகழ்கிறது என அவர் தெரிவித்தார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp