விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இனமான பேராசிரியர் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு செஞ்சி பேருந்து நிலையம் எதிரில்அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இனமான பேராசிரியரின் திருவுரவப்படத்திற்குசெஞ்சி நகர செயலாளர் கார்த்திக் தலைமையில்விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ,முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான்எம் எல் ஏ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்துகழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 9 தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் கழக நிர்வாகிகள்,பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தமுதலமைச்சரின் அழைப்பிதழை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வழங்கி மாநாட்டில்கலந்து கொள்ள வேண்டும் என
முதலமைச்சரின் அழைப்பிதழை வழங்கினார்.
நிகழ்ச்சியில்செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், வல்லம் ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார்,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான்,.மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ,வல்லம் தெற்கு ஒன்றிய செயலாளர் மொடையூர் துரை,
மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை,நகர பொருளாளர் நெடுஞ்செழியன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், சங்கர், பொன்னம்பலம், சிவகுமார்,நூர்ஜகான் ஜாபர்ஒன்றிய அவைத் தலைவர் வாசு, மாவடடபிரதிநிதி அய்யாதுரை, வீடூர் பிரகாஷ்,மாவட்டஅமைப்புசாரா தொழிலாளர் அணிஅமைப்பாளர் தமிழரசன்,நிர்வாகிகள்சீனிவாசன்,தொண்டரணி பாஷா, சந்திரன், ,செழியன், நிர்வாகிகள் ,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்