விழுப்புரம் இ எஸ் கல்வியில் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு இ .ஸ் கல்வி குழுமத்தின் தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில் முருகன் அனைவரையும் வரவேற்றார்
நிகழ்ச்சியில் முதலாமாண்டு மாணவருடைய உளவியல் செயல்பாட்டின் பயிற்சி இதழ் மற்றும் செய்தித்தாள் அனுபவ பகிர்வு திரட்டு வெளியிடப்பட்டது .
சிறப்பு அழைப்பாளராக சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை துணை பேராசிரியர் முனைவர் வினோத்
பாண்டிச்சேரி டி எஸ் சி
தலைமையாசிரியர் அரவிந்தராஜா
காவணிப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சங்கீதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி முடித்துச் செல்லும் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி துணை பேராசிரியர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்
விழுப்புரம் இ எஸ் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது