வந்தவாசி , ஜன 06:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சியின் 11ஆவது வார்டு பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது .ரூபாய் 5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள இப்பணிக்கான பூமி பூஜையை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். மேலும் இந்த நிகழ்வில் வந்தவாசி நகர செயலாளர் தயாளன், நகர் மன்ற தலைவர் ஜலால், துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ராஜேந்திரன், உதவிப் பொறியாளர் கருணாகரன், முன்னாள் நகர் மன்ற தலைவர் அப்சர் லியாகத், நகர் மன்ற உறுப்பினர் பர்வீன், நகர் மன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!