புதுச்சேரி:
புதுச்சேரி பொதுப்பணித்துறை (நகரப் பிரிவு) சார்பில், முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள வசந்தா நகர், ஏழுமலை நகர் மற்றும் மறைமலை நகர் விரிவாக்கப் பகுதிகளில் உள்ள தார் சாலைகளைப் புனரமைத்து மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ. 35.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 10:00 மணி அளவில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில், முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத் கலந்துகொண்டு, பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்தச் சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடைவதன் மூலம் வசந்தா நகர், ஏழுமலை நகர் மற்றும் மறைமலை நகர் விரிவாக்கப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரடிப் பயனடைவார்கள். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பணிகளைத் தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!