திருச்சி மாவட்டம் , மருங்காபுரி வட்டம் , கலிங்கப்பட்டி , காலனி தெருவை சேர்ந்த பழனி மகன் ஆண்டியப்பன் ( 70 ), இவர் கூலி வேலை செய்து வருவதாகவும் , பொன்னமராவதி – பாலக்குறிச்சி செல்லும் மாநில தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிழக்குக்காடு என்னும் பிரிவு சாலை அருகே சாலையின் ஓரமாக மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது கலிங்கப்பட்டி , கிழக்குக்காடு கிராமத்தைச் சேர்ந்த அழகன் என்பவரது மகன் பிரேம்குமார் என்பவர் தனது (Tata indra) நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆண்டியப்பன் என்பவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்ததால் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வளநாடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!