கோவை பிப்:15
சிவ சேனா கட்சியின் தேசிய தலைமை பொருப்பாளர் சஜித் திருத்திக் குனில், மாநில செயல் தலைவர் தஞ்சை க. சசிகுமார்,தலைமை ஒருங்கிணைப்பாளர்மா.முருகன் மாநில அமைப்பு செயலாளர்,செந்தில்,பாரதிய காம்கர் சேனா மாநில செயலாளர்: மாரி செல்வம், கோவை மண்டல தலைவர் ஹரிஹரன் கோவை மாவட்ட தலைவர் நாகராஜன்,மாநகர தலைவர் மருது வடக்கு மாவட்ட தலைவர் கர்ணன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:தமிழக சட்டமன்ற தேர்தலில் சிவ சேனா கட்சியின் அகில இந்திய தலைவர் உத்தவ் தாக்ரேயின் ஆணைப்படி கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் சென்னை, தஞ்சை நாங்குநேரி, கோவில்பட்டி ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது.தமிழ்நாட்டில் 18 லட்சம் மராட்டியர்கள் உள்ளனர்.கோவை தெற்குதொகுதியில் மட்டும் அதிக அளவிலான மராட்டிய வாக்காளர்கள்உள்ளனர் உள்ளனர்.
மேலும் கோவையில் கட்சியை வலுப்படுத்தவும் தொழிற் சங்கத்தை வலுப்படுத்தவும் துப்புறவு தொழிலாளர் நலனுக்காகவும் புதிய நிர்வாகிகள் நியமித்து உள்ளோம் என்று கூறினார்கள்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்