புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேசம், அரியாங்குப்பம் கொம்யூன், மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டோல்கேட் கிராமத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க, புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை இன்று (02.02.2026) நடைபெற்றது.
டோல்கேட் கிராமத்தில் உள்ள பச்சைவாழி அம்மன் கோவில் அருகில் உள்ள அரசு நிலம்.
பொதுப்பணித்துறை மூலம் சுமார் ₹24.00 லட்சம் மதிப்பீட்டில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதன் மூலம் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 2000 பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
புதுச்சேரி முதலமைச்சர் திரு. N.ரங்கசாமி அவர்களின் தலைமையில், பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. K.லட்சுமிநாராயணன் அவர்களின் முன்னிலையில், மணவெளி சட்டமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான திரு. R.செல்வம் அவர்கள் பூமி பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் திரு. K.வீரசெல்வம், கண்காணிப்புப் பொறியாளர் திரு. R.சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் திரு. S.பக்தவச்சலம், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், ஊர் பொதுமக்கள் திரளாக வந்து சிறப்பித்தனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!