ரூ.1 லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு
விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்:
திருச்சி ஜூலை 13
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாதுளத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது மாநில நிர்வாகிகள் மேகராஜன், பரமசிவம், தட்சிணாமூர்த்தி, மதிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில்,
காவிரியில் கர்நாடக அரசு ஜனவரி முதல் மே மாதம் வரை தமிழகத்துக்கு 12 புள்ளி 75 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது அதேபோன்று ஜூன் மாதத்தில் ஒன்பது புள்ளி 19 டி எம் சி தண்ணீரும் ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரும் திறந்து விட வேண்டும் அவ்வாறு முறைப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தால் தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் ஆனால் தண்ணீர் திறந்து விடாத காரணத்தினால் குறுவை சாகுபடி செய்ய இயலவில்லை ஆகவே தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் நஷ்ட ஈடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடர்வது என தீர்மானிக்கப்பட்டது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்