கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாநில செயலாளரும், முன்னாள் ஊத்தங்கரை சேர்மனுமான ஜே.எஸ். ஆறுமுகம் பங்கேற்றார்.
தனஜெயம் மற்றும் ஜமால் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ராமன், வினோத் குமார், சபாபதி, பைரோஸ் பாபு பாய், லோகநாதன், அஜ்முதின், அம்சா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்