வந்தவாசி, பிப் 03:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் சன்னிதியில் 3வது வார்ஷிக மஹோத்ஸவ விழாவில் கருடசேவை வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற கருடசேவை வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ கைங்கர்யம் டிரஸ்ட் சார்பில் உற்சவ மூர்த்திகளுக்குஹோம பூஜைகள் மற்றும் திருமஞ்சனம் நடந்தேறியது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்