June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

எழில் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் அருண் தத்தன்,பரிசுகளை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம்
எய்யில் கிராமத்தில் அம்பேத்கர் கிரிக்கெட் கிளப்
மற்றும் மேல்மலையனூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழிராஜதத்தன், முதலாம் நினைவு கோப்பை பழகும் கிரிக்கெட் எழில் கிராமத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஇஅதிமுக மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் இரா .அருண்தத்தன், கலந்துகொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு முதல் பரிசினை தச்சாம்பாடி கிரிக்கெட் அணியினருக்கும், இரண்டாவது பரிசினை எய்யில் கிரிக்கெட் அணியினருக்கும், மூன்றாவது பரிசினை மேல்மலையனூர் கிரிக்கெட் அணியினருக்கும்,
நான்காவது பரிசினை வேலந்தாங்கல் கிரிக்கெட் அணியினருக்கும் வழங்கினார். இதில் எய்யில் ஒன்றிய குழு உறுப்பினர் செந்தாமரை கெம்பீரம், பெருவளூர் வழக்கறிஞர் லோகநாதன், எய்யில் சங்கர், வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்

கடந்த 14 தேதி முதல் நடைபெற்று கிரிக்கெட் போட்டியில் 35 க்கு மேற்பட்ட கிரிக்கெட் அணியின் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது