225 மனுக்கள் வரப்பட்ட நிலையில் மேல் நடவடிக்கைக்கு உத்தரவு..
ஈரோடு. ஜூன். 30
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 225 மனுக்கள் பெறப்பட்டு மேல் நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பொது மக்களுக்கான, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர்சு. சாந்தகுமார் தலைமை வகித்த பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கொடுத்தனர்.
இதில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் கோரிக்க மன, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கல்வி கட்டணத்திற்கான உதவி கேட்டு மனு. மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்கான கோரிக்கை மனு. மற்றும் தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் செய்து தர கோரியமன உள்ளிட்ட 225 மனுக்கள் நேற்றைய கூட்டத்தில் பெறப்பட்டது.
மேலும் காவல்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மனுக்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நேற்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடைபெற்றது.
பள்ளி மாணவ மாணவிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!