வந்தவாசி , நவ 26:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை விரைவில் முடிக்குமாறு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் டி.செல்வம், வட்டாட்சியர் எஸ்.சம்பத் குமார், நகராட்சி ஆணையர் சோனியா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த ஆய்வின் போது அங்கு வரையப்பட்ட விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!