விழுப்புரம் மாவட்டம்
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது பக்தர் தவறவிட்ட தங்க நகைகளை பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர்கள் சதீஷ் மற்றும் தர்மதுரை ஆகியோர் கையில் கிடைத்துள்ளது. இதனை உரியவரிடம் ஒப்படைக்க மேல்மலையனூர் காவல் ஆய்வாளர் வினிதா அவர்களிடம் ஒப்படைத்த காவலர்களின் நேர்மையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் IPS., அவர்கள் நேரில் அழைத்து நற்சான்று கொடுத்து பாராட்டினார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பான முறையில் பணியாற்றி காவலர்களுக்கு பாராட்டு .

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!