February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசியில் கோவில் எதிரே கொட்டப்படும் குப்பைகள்…!

வந்தவாசி, நவ 18:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் ரங்கநாத பெருமாள் கோவில் எதிரே தினந்தோறும் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெரு மாடுகள் மேயும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே நகராட்சி இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp