விழுப்புரம் மாவட்டம் சிட்டாபூண்டி கிராமத்தில் 2023–2024 ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் ரூ.13.92 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான்,
வேலூர் மண்டலம் முனைவர் கல்லூரி கல்வி இணைய இயக்குநர்,
செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு தமிழர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான்,
ஆரணி மக்களவை தொகுதி உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன்,
செஞ்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர். விஜயகுமார்,
செஞ்சி பேரூராட்சி மன்றதலைவர் கே எம் எஸ் மொக்தியார் அலி மஸ்தான்,
அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஸ்ரீவித்யா அவர்கள்,
மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன்,
ஆனந்தபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் முருகன்,
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அரங்கஏழுமலை, அகிலா, பார்த்திபன், சாந்தி, சுப்பிரமணி, செல்வி, ராமசரவணன்,
ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் பி. ஜெயபாலன்,
செஞ்சி ஒன்றியம் – விஜயலட்சுமி,
மேல்மலையனூர் ஒன்றியம் – முருகன்,
செஞ்சி பேரூராட்சி – ராஜலட்சுமி செயல்மணி,
ஆனந்தபுரம் பேரூராட்சி – அமுதா, கல்யாணகுமார்,
சிட்டாபூண்டி ஊராட்சி மன்ற தலைவர் பச்சையப்பன்,
ஒன்றிய குழு உறுப்பினர் சித்தாமூர்த்தி, ராஜாராமன்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அத்துடன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செஞ்சியின் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்த விழாவில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!