திருவண்ணாமலை மாநகராட்சி அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோயில் 2025 ஆம் ஆண்டு திருகார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில் இயங்கிவரும் அரசு சில்லறை மதுபானக் கடை எண்: 9481 (காமராஜர் சிலை அருகில்) கடை எண்: 9261 (மணலுார்பேட்டை சாலை) கடை எண்: 9490 (அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் ) மற்றும் சமுத்திரம் கிராம கடை எண். 9476 ஆகிய 4 டாஸ்மாக் கடைகளும்,
02.12.2025 நண்பகல் 12.00 மணி முதல் 04.12.2025 அன்று இரவு 10.00 வரை 3 நாட்கள் மற்றும் திருவண்ணாமலை நகரத்தின் உள்பகுதியில் இயங்கிவரும் மதுபானக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், முன்னாள் இராணுவ வீரர்களுக்கான அங்காடி, உரிமம் பெற்ற மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு 02.12.2025 அன்று காலை 10.00 மணி முதல் 04.12.2025 அன்று இரவு 10.00 வரை 3 நாட்களுக்கு மதுவிற்பனை நடைபெறாமல் மூடிவைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..