June 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று 29.06.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.

மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் வீர் பிரதாப் சிங், இ.ஆ.ப., மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பி. ஜெய நிர்மலா , நகரப் பொறியாளர் அண்ணாதுரை, நகர் நல அலுவலர் கார்த்திகேயன், செயற்பொறியார்கள்,உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.