கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகளுடன் பொதுமக்கள் வழங்கிய, 556 மனுக்களை பெற்று கொண்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், முதல்வர் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு, 5.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்களை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மற்றும் அனைத்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ரூ.5.57 லட்சத்தில் செயற்கை கால் வழங்கல்

More Stories
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.