சிஐடியு, மாதர், விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் :
திருச்சி ஜுலை 20-
டெல்லி ஜந்தர் மந்தில் 20 நாட்களுக்கும் மேலாக அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் மற்றும் மாணவர்களை டெல்லி காவல்துறை வன்முறையை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியதையும்,
அவர்களின் தொலைதொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டு எவ்வித தகவலும் வெளியே தெரியாத வண்ணம் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த அடக்கு முறையை கண்டித்தும்
கல்வி அமைப்பின் நம்பகத் தன்மையை பாதுகாக்க வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
தேசிய தேர்வு முகமையின் நிர்வாக தோல்விகள், நீட் ,கியூட், யுஜிசி -நெட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் தொடரும் வினாத்தாள் கசிவுகள் மற்றும் கல்வித்துறையின் வணிகமயமாக்களுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும்
சிஐடியு, மாதர், விவசாயிகள் சங்கம் சார்பில் பாலக்கரை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி
சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஶ்ரீதர்,
மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் தங்கதுரை ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்