அறந்தாங்கி ஜூலை 20
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள செட்டிக்காடு கிராமத்தில் WADO INTERNATIONAL KARATE FEDERATION TAMILNADU சார்பில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தகுதிப்பட்டை (Belt Grading) வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கராத்தே மாணவர்களுக்கு தகுதிப்பட்டைகளை வழங்கி பாராட்டினார்.
மேலும், மாணவர்கள் தற்காப்புக் கலையான கராத்தே மூலம் உடல் ஆரோக்கியம், ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி வடக்கு ஒன்றிய செயலாளர் அயூப்கான், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆண்ட்ரூஸ் பாண்டியன், நகரச் செயலாளர் முகமது ராவுத்தர், VGS செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கராத்தே பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
செய்தியாளர் பழனிவேல்

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..