February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

7500 கடிதம் மூலம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கோவை மக்கள்!!

கோவை: மார்ச்-01

தமிழகத்தின் திராவிட மாடல் முதலமைச்சரின் சீரிய முயற்சியால் தமிழக மக்களுக்கு பல விதமான நலத்திட்டங்களை கொடுத்தார்.இதில் 118 நலத்திட்டங்கள் மக்கள் பயனடைந்துள்ளனர். இந்த பயனாளிகள் தமிழக முதல்வருக்கு மார்ச் 1 பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் நன்றி செலுத்தும் வகையில் கடிதம் எழுதி உள்ளனர் இந்த கடிதம் முதலமைச்சருக்கு 1ம் தேதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

சமூகத்திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பாக அரசாங்கம் வழங்கக்கூடிய நான் முதல்வன் திட்டம் மூலம் 1000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சிகள் அளித்தும் அவர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்கி பிளாஸ்டிக் போன்ற மண்ணுக்கும் மனிதனுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பல பொருட்களை தடை செய்யக்கூடிய அளவிற்கு உற்பத்தி செய்த பல பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு உலக மகளிர் தின நிகழ்ச்சி முழு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.இதன் ஒரு பகுதியாக முதல்வருக்கு நன்றி செலுத்தும் வகையில் 7500 பெண்கள் ஒன்றிணைந்து 7500 கடித வாழ்த்து அனுப்பி முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து நன்றி தெரிவித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp