வந்தவாசி, ஜூன் 09:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதியின் பாஞ்சாலி சபதம் என்ற தலைப்பில் புலவர் ஏ.ஏழுமலை பேசினார். மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு வங்கியின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை விளக்கினார். சங்க தலைவர் பொன்.ஜினகுமார், பொருளாளர் கோவிந்தசாமி, நிர்வாகிகள் காளத்தி, அசோக்குமார், கோபாலகிருஷ்ணன், .மாவட்ட கல்வி அலுவலர் ஓய்வு பாஸ்கர், தொடக்கக்:கல்வி அலுவலர் ஓய்வு முனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க செயலாளர் நடராசன் நன்றி கூறினார்.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.