திண்டுக்கல் நவம்பர் 28
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு வடமதுரை மேற்கு ஒன்றியம் மற்றும் வடமதுரை மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக அரசு பள்ளி குழந்தைகளுக்கு 200 நபர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி அதனை தொடர்ந்து வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு ஏழைகளுக்கு துணை முதல்வர் பெயரில் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவிற்கு வடமதுரை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுப்பையன் ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணி, ராமசாமி, சுருளிராஜன், அன்பழகன் இளைஞர் அணி அமைப்பாளர் சிவா, செந்தில், முத்துக்குமார், சுபாஷ் சந்திரபோஸ், சாமிநாதன், மற்றும் கட்சியினர் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் சுப்பையன் செய்திருந்தார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!