April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் விருந்து சூர்யா நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வையம்பட்டி பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சுலைமான் அவர்கள் தலைமை தாங்கினார்.

இளங்காகுறிச்சி தலைமை இமாம் ஆசிக் ரக்மான் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றி ரமலான் மாதத்தின் சிறப்பையும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இதில் சூர்யா நினைவறக்கட்டளை மற்றும் சமூதாயக் கல்லூரியின் நிறுவனத் தலைவர், முன்னாள் வையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சூர் யா சுப்ரமணியன் கலந்து கொண்டு பேசுகையில், “லகும் தீனுகும் வலிய தீன் (உங்களுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு என் மார்க்கம்) என்ற குர்ஆன் வாசகத்தைப் போல மத நல்லிணக்கம் வளர வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் கலந்து கொண்டு இஃப்தார் விருந்தில் பங்கேற்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp