விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஈயக்குணம் கூட்டு சாலையில் அமைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் பாலகிருஷ்ணன்,மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது அதை தொடர்ந்து
ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் ஒன்றிய கவுன்சிலர் ஈயக்குணம் முரளி ஏற்பாட்டில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் 600 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கணேசன், கோவிந்தசாமி, சேட்டு, பெரியசாமி, ராஜேஷ், சாமி கண்ணு, பெருமாள், சிவக்குமார், தேவராஜ், வெங்கடேசன், ராஜேஷ், பட்டுசாமி, ராஜேஸ்வரி, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!