தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் எனவும் சண்முகம் பேட்டி.
சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற மாநில செயலாளர் சண்முகம் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் இடதுசாரி மாணவர் இளைஞர் அமைப்பினர், கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தலைமை செயலாளரால் இந்த சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் சாய்குமார் அப்பொறுப்பில் நீடிப்பதற்கு தகுதியற்றவர். உடனடியாக அவரை நீக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை (இன்று) தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம். இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாளையம் வட்டாட்சியரின் அறிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டரின் கருத்தும், சட்டசபையில் பேசிய அமைச்சரின் கருத்தும் முரண்படுகிறது.
சட்டமன்றத்தில் உண்மை தகவலை மட்டுமே சொல்ல வேண்டும். இருவரில் யார் கூறியது உண்மை என தெளிவுபடுத்த வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு செலவில் கார் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கார் வைத்துள்ளனர். கார் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடன் உதவி வழங்கி, கார் வாங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி பிரச்னை நிலுவையில் உள்ளது.
விவசாயிகளுக்கு கொடுப்பதற்கு அரசிடம் பணம் இல்லை. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பதற்கு பணம் இருக்கிறதா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வாங்கி தருவோம் என அறிவித்திருப்பதை திரும்பப் பெற வேண்டும். இதேபோல், தொகுதி மறுவரையறை விவகாரத்தை பொறுத்தவரை, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபடி நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…