April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

வந்தவாசி, மார்ச் 31:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாயகி சமேத ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாள் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மோர் வழங்கப்பட்டது. முன்னதாக உற்சவ மூர்த்திகளுக்கு கோவிலில் விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது.

Facebook
YouTube
Instagram
WhatsApp