August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எனது தாயார் பெயரில் பெற்ற விவசாயத்திற்கான இலவச மின் இணைப்பை வேறு ஒருவருக்கு வழங்கியஉதவி மின்பொறியாளர்மீது நடவடிக்கை எடுக்க வழியுறுத்தி விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவினைக் கொடுத்தார்,………………………………………………….கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளஅங்கொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ராமசந்திரன் இவரதுமனைவி விசாலி இவரது பெயரில் உள்ள நிலத்திற்கு இலவச மின் இணைப்பு கேட்டு மின்வாரிய நிலத்திற்கு மனு கொடுத்ததைஅடுத்து கடந்த 2022 -ல் இலவசமின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.இத்த நிலையில் ராமசந்திரன் தனது மனைவி பெயரில் உள்ள நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து உள்ளார்ஆனால் அந்த நிலத்தில் உள்ள இலவச மின்சாரத்தை அதைப்பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு மாற்றித்தர வேண்டும் என்று மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனுவினைக் கொடுத்துள்ளார்.ஆனாலும் இது வரை மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறதுஇத்த நிலையில் விசாலி பெயரில் உள்ள இலவச மின் இணைப்பை சின்னசாமி என்பவருக்கு கொடுத்து உள்ளதாக தெரிகிறது இதனால் பாதிக்கப்பட்ட விசாலின் மகன் சத்திகுமார் தமிழக அரசு கொடுத்த இலவச மின் இணைப்பை எங்களுக்கே கொடுக்க வேண்டும் என வழியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் புகார் மனுவினை கொடுத்தார்.

மேலும் இது குறித்து பேசிய
சத்திகுமார் என்னுடைய அம்மா விசாலி பெயரில் பெற்ற இலவச மின் இணைப்பை
உதவி மின்பொறியாளரான முருகன், சின்னசாமி என்பவருக்கு கொடுத்து உள்ளார்.
ஏற்கனவே பல முறை
இலவச மின் இணைப்பை எங்களுக்கு வேண்டும் என்று மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை ஆனால் சின்னசாமி உதவி மின் பொறியாளர் முருகனுக்கு உறவு முறை சொந்தம் என்பதால் எங்களுடைய இலவச மின் இணைப்பை அவருக்கு கொடுத்து உள்ளார்
ஆகையால் அரசு கொடுத்த இலவச மின் இணைப்பை மீண்டும் எங்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்