பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தான் செயல்படுகிறது
ஜிகே மணி கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அவரின் பதிலை வைத்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் முடிவெடுப்பார் என பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெயங்கொண்டத்தில் அரசு மதுபான கடை திறப்பதற்க்கு கட்டிடம் கட்டப்பட்டுவருவாதகவும் அதில் அரசு மதுபானக் கடை திறக்க கூடாது என பா.ம.க வழக்கறிஞர் பாலு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியை சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
ஜிகே மணி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மீறியிருக்கிறார் என்று அவருக்கு விளக்கம் கேட்டு கடந்த 18ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருக்கோம். அவருடைய பதில் இதுவரையில் வரவில்லை.
அவர் கொடுக்கும் விளக்கம் ஏற்புடையதா என்பது குறித்து எங்களுடைய கட்சியினுடைய ஒழுங்கு நடவடிக்கை குழு விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கும்
சேலத்தில் வரும் 29ஆம் தேதி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறுவதாக சொல்லப்படும் பொதுக்குழு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு அல்ல
பொதுக்குழுவை கூட்டுவதற்கான அதிகாரம் கட்சியினுடைய தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது.
எனவே அதை பாட்டாளி மக்கள் கட்சியினுடைய பொதுக்குழுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
அந்த கூட்டத்தில் எடுக்கக்கூடிய எந்த முடிவும் பாட்டாளி மக்கள் கட்சியை கட்டுப்படுத்தாது.
இதுபோன்று பாட்டாளி மக்கள் கட்சியினுடைய பொதுக்குழு என்ற பெயரில் வந்திருக்கக்கூடிய இந்த அறிவிப்பு தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடிதம் அனுப்பியிருக்கிறோம் என கூறினார்

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.