April 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அஞ்செட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் கைது

தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஆணைமலையான்பட்டியைச் சோ்ந்தவா் சுதாகரன் (51). இவா், ஒசூா் அன்னை நகரில் தங்கி உள்ளாா். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி பிற்பகல் இப்பள்ளியின் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு சுதாகா் பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினாா். இதையடுத்து, மாணவியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் வாசுகி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சுதாகரனைக் கைது செய்தாா்.

Facebook
YouTube
Instagram
WhatsApp