வையம்பட்டி மார்ச் 1
திருச்சி மாவட்டம்
கடவூர், இன்பா சேவா சங்கத்தில், AHIMSA NGO அமைப்பின் சார்பில் “அடிப்படை பயோடைனமிக் விவசாயம்” குறித்த மூன்று நாள் பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த பயிற்சியில் சுற்றுவட்டார கிராம ப்புறத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பயிற்சி முகாமை காந்திகிராம ரூரல் யூனிவர்சிட்டி முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மார்க்கண்டன் தொடங்கி வைத்து, நிலைத்துறையான மற்றும் புதுப்பிக்கும் விவசாய முறைகள் காலத்திற்குத் தேவையானவை என வலியுறுத்தினார். மேலும், பயோடைனாமிக் அசோசியேஷன் தலைவர் சந்திரசேகர், கூறிய பொழுது மண் வளம் பாதுகாப்பு, காலநிலை மாற்ற இது போன்ற சவால்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டில் பயோடைனமிக் விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
முதல் நாளில் பியர்ஸ் இந்தியா செயலாளர் டாக்டர் பெருமாள் தலைமையில் பயிற்சி நடைபெற்றது. அவருடன் பயோடைனமிக் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் முதன்மை பயிற்சியாளர்கள் ஜெய்சன் ஜே, ஜெரோம் மற்றும் அன்பு ஆகியோர் இணைந்து வழிநடத்தினர்.
காலை அமர்வு: பயோடைனமிக் விவசாயத்தின் அடிப்படை கோட்பாடுகள் மற்றும் தத்துவம் குறித்த கோட்பாட்டு வகுப்புகள். மற்றும்
மாலை அமர்வு: பி.டி. கம்போஸ்ட் தயாரித்தல் உள்ளிட்ட செயல்முறை பயிற்சிகள். பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது
பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் ஆர்வத்துடன் செயல்பட்டு, மண் சீரமைப்பு மற்றும் இயற்கை விவசாய முறைகள் குறித்து நடைமுறை அறிவை பெற்றனர். இது ஒரு பயனுள்ள மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் கற்றல் அனுபவமாக அமைந்தது.
விவசாயிகளின் உற்சாகமும் ஆர்வமும், நிலைத்துறையான கிராம வளர்ச்சிக்கான பயோடைனமிக் மற்றும் புதுப்பிக்கும் விவசாய முறைகளின் மீதான அதிகரித்து வரும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
மூன்று நாட்கள் அர்த்தமுள்ள கற்றலும் மாற்றமும் நிறைந்த இந்த முயற்சி, எதிர்கால நிலைத்துறையான விவசாயத்திற்கான சிறந்த தொடக்கமாக அமையும்.

More Stories
இ.எஸ் . கல்வியில் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா
7500 கடிதம் மூலம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கோவை மக்கள்!!