புதுச்சேரி:
புதுச்சேரியைச் சேர்ந்த நடிகர் மற்றும் சமூக சேவகர்மான பாண்டி ரவி, சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய நிலையில், தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.
இந்த இணைப்பு நிகழ்வு, தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புசி ஆனந்த் அவர்களின் தலைமையில், கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, தமிழக அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும், இந்த இணைப்புக்குப் பிறகு அங்கு இருந்த மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரிடம் நடிகர் பாண்டி ரவி ஆசிர்வாதம் பெற்று தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்கினார்.
நடிகர் பாண்டி ரவி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் ஒரு முக்கிய அங்கமாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அரசியல் அனுபவமும், சமூக சேவையும் கட்சியின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.