ஈரோடு தயா அறக்கட்டளை சார்பில் சிறப்பான ஏற்பாடு.
.
ஈரோடு. மார்ச். 29
நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக பெருந்துறையில் வாக்குப்பதிவு விழிப்புணர் பேரணி நடைபெற்றது.
வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதைத் தொடர்ந்து அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 100% வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்கள் மத்தியில் வாக்குப்பதிவு உறுதி செய்யும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற வருகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் 103. பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் 100% வாக்குப்பதிவு குறித்த வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு பேரணி ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பெருந்துறை ஈங்கூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மாணவர்கள் மத்தியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மாணவர்கள் மத்தியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பேரணியை மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் குடியரசுத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஹிந்துஸ்தான் கல்லூரி முதல்வர் ராமன், இ எல் சி ஒருங்கிணைப்பாளர் திவ்யா, தாலுகா வழங்கல் அலுவலர் ராஜகோபால், தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப், உள்பட தேர்தல் நடத்தும் ஆளுவாளாளர்கள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election