February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டகுழு சார்பில் காத்திருப்பு இயக்கம்.

கள்ளக்குறிச்சி டிச 21

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் TNPSC தேர்வின் மூலம் 1 லட்சம் காலிபணியிடத்தை நிரப்பிட வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் மாவட்ட துணை தலைவர் கா.சக்கரவர்த்தி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை துவக்கி வைத்து TNGEA மாநில துணை பொதுச்செயலாளர் கே.மகாலிங்கம் பேசினார்.

இதில் DYFI மாவட்ட செயலாளர் மு.சிவக்குமார், STFI அ.பொ.உறுப்பினர் கு.சுதா, AIDWA மாவட்ட செயலாளர் ந.தனலட்சுமி, SFI மாவட்ட செயலாளர் வே.பிரகாஷ்காரத், DYFI மாவட்ட துணை தலைவர் மு.ஹரிகிருஷ்ணன், ஆறு.பகத்சிங்,
DYFI மா.செயற்குழு உறுப்பினர் மொ.தீபன்ராஜ் மற்றும்
மாவட்டக்குழு உறுப்பினர்கள்
டி.ரகு, டி.ராஜீகாந்தி
வெ.சந்திரபோஸ், மு.சரத்குமார்
கே.ஆறுமுகம், ஏ.ரிச்சர்ட்பிரபு, ப.சின்னராசு ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினார்கள்.

போராட்டைத்தை நிறைவு செய்து மாநில செயற்குழு உறுப்பினர் கோ.அரவிந்தசாமி பேசினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp