விஜய் ஏன்?சேலத்தை தேர்ந்தெடுத்தார் – தவெக மக்கள் சந்திப்பின் பரபரக்கப்போகும் பரப்புரை.
தமிழக சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ளது.அதற்கான வேலைகளை ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியும் தங்களின் பணிகளை தீவிரப்படுத்தியிருக்கின்றது. கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சி துவங்கப்பட்டது. விஜய் அரசியலுக்கு வருவாரா ? எப்போது வருவார் ? என்ற கேள்வி கடந்த பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு பிப்ரவரி 2024 ஆம் ஆண்டு விடை கிடைத்தது.
சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்து தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் கட்சி தலைவரானார் தளபதி விஜய். தற்போது அவர் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கின்றார். அதற்கான வேலைகளை விறுவிறுப்பாக செய்து வரும் விஜய் விரைவில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த திட்டமிட்டு வருகின்றார். பிப்ரவரி முதல் வாரமே விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது ஒரு வாரம் கழித்து பிப்ரபாரி 13 அல்லது பிப்ரவரி 14 ஆம் தேதியில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த இருப்பதாக செய்திகள் வருகின்றன. சேலத்தில் தான் விஜய் தனது கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த இருக்கிறாராம். இதற்கான அனுமதி கோரி மனு காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மகுடஞ்சாவடி பகுதியில் தான் விஜய் தனது மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த இருக்கின்றார். எனவே தான் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் மனு கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் தனது பிரச்சாரத்தை சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் துவங்குவது ஏன் ? என்ற கேள்வி தற்போது எழுந்து வருகின்றது.
அதாவது முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் சேலம் மகுடஞ்சாவடியில் தான் தனது பரப்புரையை செய்தார். 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா அவர்கள் அங்கு தனது பரப்புரையை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து தற்போது விஜய்யும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் செய்யப்பட இருப்பதால் இந்த விஷயம் பேசும்பொருளாக மாறியிருக்கின்றது.
மேலும் இதுவரை விஜய் ஒருபக்கம் திமுக மறுபக்கம் பா ஜக ஆகிய காட்சிகளை தான் நேரடியாக விமர்சனம் செய்து வந்தார். குறிப்பாக திமுக கட்சியை தனது அரசியல் எதிரியாகவே கூறினார் விஜய். ஆனால் சமீபகாலமாக விஜய் அதிமுக கட்சியையும் விமர்சனம் செய்து வருகின்றார். தொடர்ந்து அதிமுக கட்சியையும் சீண்டி வரும் விஜய் தற்போது ஜெயலலிதா அவர்கள் பரப்புரை செய்த இடத்திலேயே தனது மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த இருப்பது பரபரப்பை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பரப்புரை செய்த இடம் என்பது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரும் சேலம் தான். அப்படி இருக்கையில் விஜய் தனது பரப்புரைக்கான இடமாக சேலத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.இதற்கிடையில் தற்போது சேலம் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தவெக வினர் அனுமதி கோரி மனு கொடுத்திருக்கும் நிலையில் அதுகுறித்து காவல் துறையில் பலத்த ஆலோசனை நடந்து வருவதாக தெரிகின்றது.விரைவில் அந்த மனுவிற்கான அனுமதி குறித்தான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!