புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கதிர்காமம் தொகுதி திமுக வேட்பாளர் வடிவேலு, தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று 02.04.26 காலை, கதிர்காமம் தொகுதிக்கு உட்பட்ட ஆனந்தம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வேட்பாளர் வடிவேலு தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாகச் சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். பொதுமக்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் அவர் ஆதரவு கோரினார்.
வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் வடிவேலு மக்களிடம் பேசியதாவது:
திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அவை அடித்தட்டு மக்களைச் சென்றடைந்த விதம் குறித்தும் விரிவாக விளக்கினார்.
கதிர்காமம் தொகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், குடிநீர் மற்றும் சாலை வசதிகளைச் சீரமைக்கவும் தான் வைத்துள்ள புதிய திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தார்.
தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட, வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழிநெடுகிலும் பொது மக்கள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் நெருங்கி வருவதால், கதிர்காமம் தொகுதியில் அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பைக் கண்டுள்ளது.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..