புதுச்சேரி:
மங்கலம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரான முனைவர் கண்ணபிரான், தனது ஆதரவாளர்களுடன் லட்சிய ஜன நாயக கட்சியிலிருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்த அவர், தனக்குக் கட்சியினர் முன்னிலையில் வரவேற்புப் பெற்றார். இந்தச் சந்திப்பின் போது, முதல்வர் ரங்கசாமிக்கு அவர் வெண்கல முருகன் சிலை ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உடனிருந்தனர். மங்கலம் தொகுதி அரசியலில் இந்த இணைப்பு ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..