கோவை -மார்ச் :17
தென்னிந்தியாவின் மிக நம்பிக்கைக்குரிய முதியோர் குடியிருப்பு உருவாக்குனர்களில் ஒருவராகிய ‘ஆலம் ஸ்டெப்ஸ்டோன் சீனியர் ஹெவன் புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்’நாட்டின் முதல் ‘3-இன்-1’ முதியோர் சொகுசு குடியிருப்புத் திட்டமான ‘ஸ்ரீனிவாசா பாம்ஸ்’ (Srinivasa Palms)-ஐ உருவாக்கியுள்ளது இதன் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூர், ஃபேர்ஃபீல்ட் பை மேரியட் (Fairfield by Marriott) ஹோட்டலில் மார்ச் 13 முதல் 15 வரை நடைபெறும் இந்நிறுவனத்தின் கண்காட்சியில் வீடு வாங்குவோருக்கு, பத்திரப் பதிவு இலவசமாக செய்து தரப்படும். ஒரு குடியிருப்பின் விலை ₹ 37 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
பொள்ளாச்சி அருகில்,மிக அமைதியான சூழலில், 1.18 ஏக்கர் பரப்பளவில் பசுமையான தென்னந்தோப்புகளுக்கு இடையே இக்குடியிருப்புத் திட்டம் அமைந்துள்ளது. கம்பீரமான மேற்குத் தொடர்ச்சி மலைகளின் எழில்மிகு காட்சிகளுடன் 160 குடியிருப்புகள் இதில் உருவாக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய இந்நிறுவனத்தின் நிறுவனரும், மேலாண் இயக்குநருமான திரு. மோதிஷ் குமார்,”ரியல் எஸ்டேட் துறையில் 22 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டனர்.
இந்தத் தொடக்க விழாவில் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஜி. மீனலோச்சினி (DGO),சுற்றுச்சூழல் ஆர்வலர் திருமதி உமா பாஸ்கர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரி எம். முத்துக்குமாரசாமி மற்றும் வெங்கடேஸ்வரா தேங்காய் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் தலைவர் .அறிவொளி ஆர். முத்துசாமி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election